நபி (ஸல்) அவர்கள் ஹூனைன் போருக்கு செல்லும் போது இனைவைப்பவர்களுக்கு உள்ள தாது அன்வாத் என்ற மரத்தை கடந்து சென்றார்கள். சில நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! அவர்களுக்கு தாது அன்வாத் இருப்பது போன்று எங்களுக்கும் ஏற்படுத்தி தாருங்கள் என்று கேட்டார்கள். உடன் நபியவர்கள் அல்லாஹ் மிக தூய்மையானவன்.நீங்கள் கூறுவது பனூ இஸ்ரவேலர்கள் மூஸா நபியிடம் அவர்களுக்கு கடவுள் இருப்பது போன்று எங்களுக்கும் கடவுள்களை ஏற்படுத்தி தாருங்கள் என்று கூறியதைப் போன்று இருக்கின்றது. என் உயிர் எவன் கை வசம் உள்ளதோ அவன் மீது ஆனையாக கூறுகின்றேன் நீங்கள் உங்கள் முன் சென்ற கூட்டத்தாரை பின்பற்றுகின்றீர்கள் என்று கூறினார்கள்.