பெருமானாரின் இல்லம் உக்பா பின் ஹாரிஸ் (ரலி) அறிவிக்கிறார்கள் நபி(ஸல்)அவர்கள் எங்களுக்கு அஸர் தொழவித்துவிட்டு உடனே விரைந்து வீட்டினுள் சென்று, தாமதிக்காமல் வெளியே வந்தார்கள் அப்போது நான் காரணம் கேட்டேன். அல்லது கேட்கப்பட்டது, அதற்கு நபி(ஸல்)அவர்கள் நான் எனது வீட்டில் தர்மபொருளான தங்ககட்டியை வைத்திருந்தேன். அப்பொருளுடன் இரவைக் கழிக்க விரும்பவில்லை,எனவே அதை பங்கிட்டு விட்டேன் ' எனக் கூறினார்கள். நூல் : புஹாரி , எண்-1430